News

Saturday, 16 July 2022 07:18 AM , by: Elavarse Sivakumar

தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இந்த முடிவுகளைக் காண முடியும் என்று விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது.

முதன்மை தேர்வு

இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதில்,முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடந்தது.

137 பேர்

இந்த நிலையில் 66 காலி பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 29-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வு முடிவுகள் என்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...

லெகின்ஸை விரும்பும் இளம்பெண்கள் - பதறவைக்கும் பக்கவிளைவுகள்!!

பெண் பயணிகளுக்காக பிங்க் பஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)