News

Tuesday, 27 December 2022 05:08 PM , by: R. Balakrishnan

TNPSC

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

குரூப் 4 (Group IV)

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மொத்தம் 7,382 பணியிடங்களை நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. குரூப்-4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நடத்தி கடந்த 6 மாதங்கள் ஆன நிலையில் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னதாக 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மேலும் உயர்த்தும் கோடக் மஹிந்திரா!

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொல்லை: விரைவில் விடிவுகாலம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)