News

Wednesday, 21 December 2022 07:56 AM , by: R. Balakrishnan

TNPSC Group 4 Results

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4)

முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட குரூப் 4 நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் 7301 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையில்,அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டு குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் படிக்க

இனிமே இ-சேவை மையத்திலேயே எல்எல்ஆர் பெற முடியும்: விரைவில் அமலுக்கு வரப்போகுது!

EPFO: குறைந்தபட்ச பென்சன் உயர்வு எப்போது? மத்திய அரசின் பதில் என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)