மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 July, 2022 6:20 PM IST
TNPSC

தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, நேர்காணல்களை ஏற்பாடு செய்து ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 24) நடத்தப்பட உள்ளது. நாளைய தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் "வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (ஜூலை 24) கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுகள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த டிஎன்பிஎஸ்சி (Tamil Nadu Public Service Commission) குரூப்-4 தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கு 21,85 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நாளை தேர்வு எழுதுபவர்களில் பெண்கள் 12,67,457 மற்றும் ஆண்கள் 9,35,354 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதுபவர்களையும், தேர்வு மையங்களையும் கண்காணிக்க 534 பறக்கும் படைகள் பணிகள் ஈடுபட உள்ளனர்.

இந்த குரூப்-4 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கேற்ப செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

TNPSC Group 4 Candidates: இந்த ஆவணங்கள் மறக்காமல் எடுத்து செல்லுங்கள்

- அனுமதி அட்டை
- அடையாளச் சான்று
- புகைப்படங்கள்

மேலும் படிக்க:

வீட்டுக்கு வீடு தேசியக்கொடி, பிரதமர் மோடி வேண்டுகோள்

English Summary: TNPSC: Group-4 exam tomorrow across Tamil Nadu
Published on: 23 July 2022, 06:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now