மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2021 7:07 PM IST

வேளாண் அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வேளாண் விரிவாக்க அலுவலர்ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் காலை, பிற்பகல் என இரு வேளையும், 19-ம் தேதி காலையிலும் 7 மாவட்டங்களில் நடக்க உள்ளன. 

ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம்

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்ற எண்ணை (OTR) பயன்படுத்தி, விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

விரைவு தகவல் குறியீடு

தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ளும் நோக்கில், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் விரைவு தகவல் குறியீடு (QR Code) அச்சிடப்பட்டுள்ளது. இதை கியூஆர் செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தை கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. செல்போன் உள்ளிட்டவற்றை தேர்வு மைய பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு நெறிமுறைகள் 

  • தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும்

  • விடைகளை குறிக்கவும் கருப்புநிற பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • காலையில் நடக்கும் தேர்வுக்கு 9.15 மணிக்கு பிறகு தேர்வுக்கூடத்துக்குள் நுழையவோ, மதியம்1.15 மணிக்கு முன்பு வெளியேறவோ அனுமதி இல்லை.

  • மதியம்நடைபெறும் தேர்வுக்கு 2.15மணிக்கு பிறகு தேர்வுக்கூடத்துக்குள் நுழையவோ, மாலை 5.15 மணிக்கு முன்பு வெளியேறவோ அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English Summary: TNPSC Job vacancy: Now Hall Tickets can be downloaded Online for Agriculture and Horticulture officer examination
Published on: 13 April 2021, 07:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now