News

Friday, 09 September 2022 06:14 PM , by: T. Vigneshwaran

TNPSC Update

டிஎன்பிஎசி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் , வணிகவரித்துறை உதவி ஆணையர் , கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி என மொத்தம் 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆள் சேர்ப்பேன் மூலம் 92 பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும் என்றும், முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில் (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களினால் முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை

விஷக்காய்ச்சல் அபாயம்: 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறையா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)