நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 March, 2023 3:02 PM IST
Thomar said 14 types of garlic identified for cultivation under agro-climatic conditions

வெவ்வேறு வேளாண் காலநிலை சூழ்நிலைகளின் கீழ் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் பூண்டினை காரீஃப் பயிர் சுழற்சிக்கு ஏற்றதாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல்வேறு பருவங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகைகளை அடையாளம் காண பூண்டின் மரபணு முன்னேற்றம் குறித்து திட்டமிட்ட ஆராய்ச்சி நடத்தப்படும் என்றார்.

இந்தியாவில் வேளாண் காலநிலை நிலைமைகளை புனேவிலுள்ள ஐசிஏஆர் - வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகம், மற்றும் நாசிக்கில் அமைந்துள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.

புனேவில் உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு தொடர்பான ஐசிஏஆர் - அகில இந்திய நெட்வொர்க் ஆராய்ச்சி திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருப்பிடம் சார்ந்த அடாப்டிவ் சோதனைகள் ( மாற்றுவழி) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.

பொருத்தமான காலநிலை:

மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாய காலநிலை காரீஃப் பருவத்தில் பூண்டு உற்பத்திக்கு ஏற்றது என கண்டறியப்பட்டுள்ளது. சமவெளியில் 11 வகைகள், மலைப்பகுதிகளில் பயிரிட 3 வகைகள் என மொத்தம் 14 வகையான பூண்டுகள் வெவ்வேறு வேளாண் காலநிலை நிலைமைகளின் கீழ் சாகுபடி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த பூண்டு வகைகளில், ‘பீமா பர்ப்பிள்மற்றும் ‘ஜி282’ ஆகியவை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (ஊட்டி) ஆகிய மாநிலங்களில் காரீஃப் காலத்தில் சாகுபடி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேசமயம் ‘கடக் லோக்கல் (Gadag local) என பெயரிடப்பட்டுள்ள இனம் கர்நாடகாவின் நிலப்பரப்பிற்கு மட்டுமே உகந்தது. காரீஃப் பருவத்தில் ‘ஜி282’ மற்றும் ‘பீமா பர்பில்வகையான பூண்டுகள் ஹெக்டேருக்கு 40-50 குவிண்டால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

'ஜி389' எனப்படும் பூண்டு வகை மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதியில் ராபி பருவத்தில் (ஹெக்டருக்கு 60-70 குவிண்டால்) காரீஃப் பருவத்தில் (ஹெக்டருக்கு 40-60 குவிண்டால்) உற்பத்தி செய்ய இயலும் என கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure-DPI) திறந்த பொதுநல தளமாக உருவாக்க ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது என்றார்.

விவசாயிகள், பயிர் விதைக்கப்பட்ட பதிவேடு மற்றும் கிராம வரைபடங்கள் மற்றும் பயிர் விதைக்கப்பட்ட பதிவேட்டின் புவி-குறிப்பு தொடர்பான தகவல்கள், ஒருங்கிணைந்த விவசாயிகள் சேவை இடைமுகம், வேளாண் தரவு பரிமாற்றம் மற்றும் ஒப்புதல் மேலாளர் ஆகியவை டிபிஐயின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க:

இந்தியாவிலேயே MSME நிறுவனங்களுக்கு 90% வரை கடன் உத்திரவாதம் வழங்குவது தமிழ்நாடு தான்- அமைச்சர் பெருமிதம்

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்

English Summary: Tomar said 14 types of garlic identified for cultivation under agro-climatic conditions
Published on: 17 March 2023, 03:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now