News

Sunday, 21 August 2022 06:30 AM , by: R. Balakrishnan

Tomato Fever

சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'லான்செட்' என்ற மருத்துவ ஆய்வு இதழில், மருத்துவ நிபுணர்கள் எழுதி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை இங்கு காணலாம்.

தக்காளி காய்ச்சல் (Tomato Fever)

இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளுக்கும், ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல், உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த கொப்புளங்கள் பெரிதாகி, தக்காளி அளவுக்கு பெரிதாகும் என்பதால், இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. தற்போதைக்கு கேரளா, ஒடிசா, தமிழகத்தில் இதன் தாக்கம் உள்ளது. இது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும்.

அதே நேரத்தில் தற்போது இந்தியாவில், 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது. அதனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?

தனியார் ஊழியர்களே உஷார்: உங்கள் வேலைக்கு ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)