நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2023 11:03 AM IST
Tomato sales through e-NAM close to 2 crores

தருமபுரியில் கடந்த 3 மாதங்களில் 925 டன் தக்காளி, 1.72 கோடி ரூபாய் மதிப்பில், e-NAM (தேசிய வேளாண் சந்தை) போர்டல் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால் விரைவில் விற்பனை ரூ.2 கோடியைத் தொடும் என்று வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை சென்னை போன்ற மாநகரங்களில் கிலோவுக்கு 120 ரூபாய் வரை எதிர்பாராத விலை ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில், பண்ணை பசுமை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 60 முதல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி விவசாயிகள் மகிழ்ச்சி:

தருமபுரி மாவட்டத்தில் சுமார் 6,100 ஹெக்டேரில் தக்காளி பயிரிடப்படுகிறது. சமீப காலம் வரை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க தனியார் சந்தைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், கடந்த மூன்று மாதங்களாக, வேளாண் விற்பனைத் துறையும், வேளாண் வணிகத் துறையும், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் (FPO) நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து, e-NAM போர்டல் மூலம் விற்பனை செய்து வருகின்றன. தருமபுரியில் இருந்து சராசரியாக 20 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு சேலத்தில் போர்ட்டல் மூலம் சந்தை மதிப்பை விட 20% கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து பாலக்கோடு விவசாயி என்.முத்தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், ”தருமபுரியில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, புதன்கிழமை ஒரு கிலோ ரூ.68 முதல் ரூ.70 வரை விற்பனையானது. சேலம், கோயம்புத்தூர் போன்ற பிற மாவட்டங்களை விட தர்மபுரியில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இங்கு தக்காளியின் விலை எப்போதும் குறைவாகவே உள்ளது. எனவே e-Nam மூலம், சேலம் சந்தை விலையில் எங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கிறோம், உள்ளூர் தேவைக்கேற்ப விலை மாறுபடும். முந்தைய விலைகளுடன் ஒப்பிடுகையில், நாங்கள் அதிக வருமானத்தைப் பெறுகிறோம்என்றார்.

மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறுகையில், “சமீபத்தில் மாவட்டத்தில் கணிசமான மழை பெய்ததால் பூக்கும் நிலையில் இருந்த தக்காளி பயிர் பாதிக்கப்பட்டது. மேலும், கடுமையான கோடைக்காலம் தக்காளியின் உற்பத்தியையும் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பிற பகுதிகளிலும் இதே நிலை என்பதால் தான் தற்போது தக்காளி விலை உயர்வுக்கு காரணம்என்றார்.

தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் ரேசன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய தயாராக உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை- விலை உயர்வு கட்டுக்குள் வருமா?

English Summary: Tomato sales through e-NAM close to 2 crores
Published on: 29 June 2023, 11:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now