News

Wednesday, 09 February 2022 02:48 PM , by: R. Balakrishnan

Tomatoes dumped on the roadside due to low prices!

விலை குறைவு காரணமாக தக்காளி சாலையோரம் கொட்டப்படுகிறது. வேலூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

விலை குறைவு (Low Price)

நேதாஜி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 12 ரூபாய் என்ற அளவில் மொத்த விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனையாக ரூ.15 லிருந்து ரூ.20 வரை கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி விலை குறைந்துள்ளதாலும், அதன் வரத்து அதிகமாக உள்ளதாலும் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அழுகி விடுகிறது. அதனை வியாபாரிகள் சாலையோரம் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னால், தக்காளியின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. அதே நேரத்தில் வரத்தும் குறைவாக இருந்தது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விலை குறைவால் வீதியில் வீசப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

சர்வதேச தலைவர்கள் பட்டியல்: பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

பஸ் டிரைவர்கள் பணியின்போது மொபைல் போன் பயன்படுத்த தடை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)