News

Friday, 20 May 2022 06:26 PM , by: T. Vigneshwaran

Tomatoes

பண்ணைப்பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தக்காளியின் மொத்த விலை ரூ.80-95 ஆக இருந்தது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் மழையால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பண்ணைப்பசுமை கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''இந்த கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோவுக்கு 70 முதல் 85 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மற்றொரு செய்தி, வெப்ப அலைக்கு மத்தியில் டெல்லியிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை கடந்த ஆண்டுகளை விட கிட்டத்தட்ட 400 சதவீதம் அதிகம் என மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு சில்லரை வியாபாரிகள் மூலம் கிலோ 65 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

வெறும் 70,000 ரூபாயில் Maruti Suzuki Car வாங்க வாய்ப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)