மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 5:50 PM IST
Ration card holders

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இச்சலுகைகளைப் பெறமுடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறையப் பேர் இச்சலுகைகளைப் பெறுவதில்லை. அதேபோல, மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் குற்றச்சாடுகளும் அதிகமாக உள்ளன.

தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டுள்ளது.

இதையடுத்து ரேஷன் கார்டு விதிமுறைகள் மாற்றப்படவிருக்கின்றன. தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த விதிமுறைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வந்தபிறகு நிறையப் பேர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடிப் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வந்தபிறகு நிறையப் பேர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடிப் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்துக்கான கால வரம்பை மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்தது. இதையடுத்து தகுதியற்றவர்களுக்கு பலன்கள் செல்லாமல் இருக்க இந்த அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ரேஷன் அட்டை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, தகுதியுடைய மக்களுக்கு தங்கு தடையில்லாமல் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது.

மேலும் படிக்க

குடும்பங்களுக்கு ஏதுவான எல்பிஜி சிலிண்டர் சலுகைகள்!

Cucumber Farming: கோடையில் வெள்ளரி சாகுபடி செய்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்

English Summary: Tragedy for ration card holders! The offer is not for everyone
Published on: 12 April 2022, 05:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now