News

Friday, 07 January 2022 10:42 AM , by: R. Balakrishnan

Agricultural Training

இயற்கை வேளாண்மை செய்ய வேண்டிய அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலல் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக அமையும்.

வேளாண் பயிற்சி (Agriculture Training)

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் ஆர்.கே.எம். இயற்கை வேளாண் பண்ணை உள்ளது. இப்பண்ணையில் இயற்கை வேளாண்மை செய்ய வேண்டியதன் அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேளாண் பயிற்சிகள், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விவசாய நுணுக்கங்களையும் அறிந்து கொள்கின்றனர். இப்பயிற்சியின் மூலம், விவசாயிகள் இயற்கை உரங்களை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்ணாரக் காண முடியும்.

பாரம்பரிய நெல் ரகங்கள் (Traditional Paddy Types)

இயற்கை விவசாயி செந்தில் உமையரசி அவர்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அவற்றுள் பால் குடல் வாழை அரிசி, தங்கச் சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, பூங்கார், மாப்பிள்ளை சம்பா ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்கள் குறித்தும், அவற்றை பயிரிடும் முறைகள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க

விவசாயிகளுடன் சேர்ந்து மிளகாய் நாற்று நட்ட மாவட்ட ஆட்சியர்!

சொட்டுநீரில் உரப்பாசனம் செய்வதன் பலன்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)