மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 January, 2021 2:37 PM IST

பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சி கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் உள்ள அல்லபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

விதை உற்பத்தி பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் பயறு வகைத்துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சி கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் உள்ள அல்லபாளையம் கிராமத்தில் 25.01.2021 அன்று நடத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு பயறு வகைப்பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சியினை அளித்து விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
பயறு வகைத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இரா. பா.ஞானமலர் அவர்கள் தொழில்நுட்பப் பயிற்சிக்கு வந்த விவசாய பெருமக்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநா் முனைவர். சே. கீதா அவர்கள் சிறப்புரையாற்றி அதிக மகசூல் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களின் இரகங்களையும் அதன் முக்கிய குணாதிசியங்களையும் எடுத்துரைத்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

அதிக லாபம் தரும் விதை உற்பத்தி

மேலும் இப்பயிற்சியில், விதை உற்பத்தியின் மூலம், தானிய உற்பத்தியைக் காட்டிலும் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம். மேலும் இப்பயிற்சியில் துவரை விதை உற்பத்தியில் இனத்தூய்மையைப் பராமரிப்பது பற்றியும் அவற்றின் வழி முறைகளையும், தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் பயறு வகைப் பயிர்களின் விதை நேர்த்தி பற்றியும், பயறு வகைப் பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் பற்றியும், பயறு வகைகளில் சேதத்தை உண்டாக்கும் பூச்சிகளைப் பற்றியும் அவற்றின் ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் விளக்கமளித்தனர்.

இறுதியாக, உதவிப்பேராசிரியர் முனைவர். ஆ. தங்க ஹேமாவதி அவர்கள் தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். இப்பயிற்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

மேலும் படிக்க...

ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

English Summary: Training Programme on Quality Seed Production Techniques in Pulses at covai agri university
Published on: 30 January 2021, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now