மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 May, 2019 11:39 AM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்தின் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி வெவ்வேறு அலங்காரம் மற்றும் வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  

முக்கிய நிகழ்வான நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை 4 :30 மணி அளவில் நம்பெருமாள் சித்திரை தேர் மண்டபத்தை அடைந்தார். பின்பு 5 :15 மணி அளவில் தேரில் எழுந்தருளினார், மற்றும் தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் 6:15  மணிக்கு   பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் கோலாட்டம் ஆடி வந்தனர். பக்தர்கள் கோவிந்தா நாமம் எழுப்பி, நம்பெருமாளை போற்றி பாடல்கள் பாடி தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

மே(4) சப்தாவர்ணம், மே(5) ஆளும் பல்லக்கு உற்சவம் ஆகியவை நடை பெற உள்ளன.

English Summary: Trichy srirangam sithirai festival 2019
Published on: 04 May 2019, 12:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now