மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 March, 2021 8:45 PM IST
Credit : Pinterest

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் (Mushroom cultivation technology) குறித்து, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். நெற்பயிர் விளைச்சல் முடிந்த பிறகு, கிடைக்கும் வைக்கோலை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, காளான் (Mushroom) வளர்ப்பில் ஈடுபடலாம். இது குறித்து தான் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

காளான் வளர்ப்பில் இருமடங்கு வருவாய்:

நெற்பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மிஞ்சிய சிறிதளவு வைக்கோலை (Paddy straw) பயன்படுத்தி புரதம் மற்றும் நார்ச்சத்து கணிசமான அளவில் உள்ள சிப்பி காளான் வளர்த்து இருமடங்கு வருவாய் (Double income) பெற முடியும் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். வேளாண்மைக்கல்லூரி மாணவர்களான சிசின்ரவி, சுபாஷ், தமிழ்மணி, தருண், சத்ரியா வசந்தகுமார், ராஜமோகன் ஆகியோர் காளான் வளர்ப்பில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

விழிப்புணர்வு

பொதுவாக நெல் அறுவடை (Paddy Harvest) முடிந்ததும், வைக்கோலை கால்நடைத் தீவனத்திற்காக விற்று விடுவார்கள். ஆனால், வைக்கோலை விற்காமல் காளான் வளர்ப்பிற்கு பயன்படுத்தினால் இருமடங்கு இலாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும். அதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும். அந்த வகையில் வேளாண் கல்லூரி மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உழவு மாடு பற்றாக்குறையால், தன் மகனை வைத்து உழவுப் பணியை மேற்கொண்ட ஏழை விவசாயி

60 வயதைக் கடந்த மண்பானை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

English Summary: Twice the profit on mushroom cultivation! Agricultural College students who trained farmers!
Published on: 15 March 2021, 08:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now