News

Sunday, 18 July 2021 09:54 AM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர் -ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் (SPACE training) பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விண்வெளி பயிற்சி

சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் அரியலுார் மாவட்டம் திருமானுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் ப்ளஸ் 1 மாணவியர் ரகசியா, வேதாஸ்ரீ ஆகியோர் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

பாராட்டு

தேர்வான இரு மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார். அரியலுார் சி.இ.ஓ. ராமன் டி.இ.ஓ. அம்பிகாபதி தலைமை ஆசிரியர் இன்பராணி ஆகியோரும் பாராட்டினர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இரு மாணவியர்களுக்கு பொதுமக்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க

ஜூலை 19 இல் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியீடு: இணையதளங்களில் பார்க்கலாம்!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)