மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 November, 2019 3:12 PM IST

மத்திய அரசின் மலைக் காய்கறி பயிர்களான, பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் விவசாயிகள் இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 6,000 ஹெக்டர் பரப்பளவில் மலை தோட்டப்பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு,  இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி  போன்ற பயிர்களும்  அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  அதிக முதலீட்டில் செய்யப்படும் இவ்வகை விவசாயத்தில் இயற்கை சீற்றங்களினால் தோன்றும் இழப்புகள் மிக அதிகம். கடந்த முறை பெய்த கனமழையால் மலை தோட்டப்பயிர்கள் பெருமளவில் சேதமாசடைந்தன.

மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வரை உருளைக்கிழங்கு, மரவள்ளி மற்றும் வாழை போன்ற பயிர்களுக்கு மட்டுமே காப்பீட்டு செய்ய அனுமதி இருந்தது.  இந்நிலையில், தற்போது  மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் முயற்சியால் இவ்வாண்டு முதல் கேரட், முட்டைகோஸ், பூண்டு மற்றும் இஞ்சி பயிர்களுக்கும் பயிர் பாதுகாப்பீடு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

எதிர்பாரதவிதமாக தோன்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்க இத்திட்டம் உதவும் என்பதால் இணைந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Under Crop Insurance Scheme, farmers can add few more crops in this scheme
Published on: 11 November 2019, 03:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now