மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2019 11:39 AM IST

தமிழக அரசின் ஊரக புறக்கடைக் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டிற்கான நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. எனவே புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.  2019-20 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் முதற் கட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1600 பேருக்கு அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.

கிராமப்புற ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி  8 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 200 பேர் வீதம் 1,600 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு  ஒரு மாதமே வயதுடைய ரூ.3,750 மதிப்பிலான 50 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள்  இலவசமாக வழங்கப்பட உள்ளது.  அத்துடன் அவற்றை பராமரிப்பதற்கு 30 சதுர அடி பரப்புள்ள ரூ.2,500 மதிப்பிலான கூண்டும் தரப்பட்டுள்ளது.

தேர்தெடுக்கும் பயனாளிகளுக்கு கோழியை முறையாக  வளர்ப்பது  குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் அளிக்கப்பட உள்ளது. கால்நடை மருத்துவர்களால் நடத்தப்படும் இம்முகாமில் பங்கேற்போருக்கு ஊக்கத்தொகையாக ரூ.150 மற்றும் செயல் விளக்க கையேடும் வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 5,175 பேருக்கு அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்க 4,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பயனாளிகளுக்கான தகுதிகள்

  • கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல் எண் உடைய பெண்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • சொந்த கிராமங்களில்  நிலையாக வசிப்பவராக இருக்க வேண்டும். 
  • அரசின் பிற சலுகைகளை முந்தைய ஆண்டுகளில் பெறாதவராக இருக்க வேண்டும். குறிப்பாக  இலவச கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது.
  • பிற்படுத்தப்பட்ட,  ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.
  • அரசு விதிமுறைகளின்படி 30 சதவீத பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை உதவி, மருத்துவ நிலையத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Under Free Country Chicken Scheme 2019-20, Tamilnadu Govt announced the details
Published on: 07 November 2019, 11:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now