News

Tuesday, 09 August 2022 07:08 PM , by: R. Balakrishnan

Underwater metro train

இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவையின் கிழக்கு - மேற்கு வழித்தடங்கள் அடுத்த ஆண்டிற்குள் (2023) நிறைவடையும் என கோல்கட்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

மெட்ரோ ரயில் (Metro Train)

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும், இந்த மெட்ரோ பாதையின் நீளம் சுமார் 17 கிலோ மீட்டர் உடையது. ஆனால் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மீதமுள்ள தூரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஓராண்டுக்குள் முழுமையடையும் என்று கோல்கட்டா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இந்தியா தொடங்கி விடும். இது வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)