News

Friday, 09 September 2022 02:46 PM , by: Deiva Bindhiya

Uninterrupted Aavin Milk Supply: Information accepted 24 hours a day

இன்று தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகிணங்க, ஆவின் சென்னை பெருநகர மொத்த விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விற்பனை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

இவ் அலோசனை கூட்டம் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-

எதிர்வரும் மழைக்காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க வேண்டும். பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியற்றுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெற 18004253300 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTN முக நூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க:

PMEGP: புதிய தொழில் தொடங்க 17.50 லட்சம் கடன் அரசு அறிவிப்பு!

2000 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)