மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 January, 2021 8:26 PM IST
Credit : News TM

கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கொள்முதல் விலை உயர்வு:

கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி (Coconut Cultivation) செய்யப்படுகின்றது. இதிலிருந்து விவசாயிகள் அதிகமாக கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum resource price) குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டால் அரவை கொப்பரை தேங்காய் (Copra coconut) விலை 9 ஆயிரத்து 960 ரூபாயில் இருந்து 10 ஆயிரத்து 335 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று பந்து கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 52 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வருவாய் (Income) கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு 4 ஆயிரத்து 896 விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 53.34 டன் முழு கொப்பரையும், 35.58 டன் காய்ந்த கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) குறிப்பிட்டு உள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? TNAU கணிப்பு!

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

English Summary: Union Cabinet approves increase in purchase price of copra!
Published on: 28 January 2021, 08:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now