நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 March, 2022 6:39 PM IST
Yogi Adityanath Voting Poll

ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வாக்களித்ததைத் தொடர்ந்துவளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் வைத்து வாக்களிக்குமாறு வாக்காளர்களை முதலமைச்சர் வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின் ஆறாவது சுற்றில் வியாழக்கிழமை (03-03-2022), கோரக்பூரில் பாரதிய ஜனதா கட்சி 80% இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கணித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் தெரிவித்தார். கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில் ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அவர் வாக்களித்ததைத் தொடர்ந்து, வாக்காளர்களை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் வைத்து வாக்களிக்குமாறு, அவர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையில், “பெரும்பாலான மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். மாநிலத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். “வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என அறிவித்தார்.

முன்னதாகஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஆதித்யநாத் அறிவித்தார். ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்படும், ஒவ்வொரு வாக்கும் உத்தரபிரதேசத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற உதவும் என தெரிவித்தார்மேலும் அவர்வாக்களிக்கும் மக்களை பார்த்துஇதுவே தேர்ந்தேடுப்பதற்கு சரியான நேரம்பாஜக-வா அல்லது தீவிரவாதத்தை உக்குவிப்பவர்களா என கேள்வியும் எழுப்பினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்குவதற்கு முன்னதாககோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார்.

கோரக்பூர், அம்பேத்கர்நகர், பல்லியா, பல்ராம்பூர், பஸ்தி, தேவ்ரியா, குஷிநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 57 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 676 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க 1,14,63,113 ஆண்கள், 99,98,383 பெண்கள் மற்றும் 1,320 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,14,62,816 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிடும் ஆறாவது சுற்றில், முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய வேட்பாளர் ஆவார்.

மேலும் படிக்க..

1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு!

English Summary: Uttar Pradesh Election 2022: Yogi Adityanath confident of winning over 80% of seats
Published on: 03 March 2022, 06:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now