மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 September, 2021 7:34 PM IST
Vaccination camp in Tamil Nadu

தமிழகத்தில் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய, 20 ஆயிரம் மையங்களில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாலை 6:20 மணி வரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி, 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்று பல்வேறு மையங்களில், பிற்பகலுக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது.

மெகா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிகம் முன்வருவதால், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாலை 4:30 மணி வரை 13.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
4 கோடியை தாண்டியது

இந்நிலையில் நேற்று வரை 3.96 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 11:30 மணியளவில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Also Read | பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

முதல்வர் ஆய்வு

சென்னையில், சைதாப்பேட்டை அருகே தடாக நகரில் சமுதாய கூடத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த குறிப்புகளை ஆய்வு செய்ததுடன், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் 17 லட்சம் தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளன. அதனால், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.மேலும், 15 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்கும்பட்சத்தில், மூன்று மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியும். பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க

எளிய வழிமுறை: கொரோனாவைக் கண்டறிய உப்புத் தண்ணீரே போதும்!

ஏறி இறங்கும் கொரோனாத் தொற்றால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

English Summary: Vaccination camp in Tamil Nadu: Vaccination for 15 lakh people!
Published on: 19 September 2021, 07:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now