நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2021 8:48 PM IST
Vaccine 2 Times

தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் உள்ள கோடலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருண், 19; தினக்கூலி தொழிலாளி. இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில், கடந்த, 1ல் நடந்த கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) முகாமில் ஊசி போடச் சென்றார். அங்கிருந்த சுகாதார ஊழியர்கள் அவருக்கு முதலில் ஒரு 'டோஸ்' தடுப்பூசி போட்டனர்.

இரண்டாவது டோஸ்

'சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுங்கள்' என்றனர். அதனால் தடுப்பூசி போடப்படும் அறையிலேயே அருண் இருந்தார். அவரை அழைத்த செவிலியர் ஒருவர், தடுப்பூசி போடத் தான் காத்திருக்கிறார் என நினைத்து இரண்டாவதாக ஊசி போட்டு அனுப்பினார். 'ஏற்கனவே எனக்கு தடுப்பூசி போட்டு விட்டனர்; இது இரண்டாவது 'டோஸ்' ஊசியா...' என, அந்த இளைஞர் அப்பாவித்தனமாக கேட்க, அப்போது தான் தவறை உணர்ந்த சுகாதாரத் துறையினர், டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த இளைஞர் முக கவசம் அணிந்திருந்ததால் இந்த குழப்பம் நடந்ததாகவும், அவர் சரியான போன் எண்ணை கொடுக்கவில்லை என்றும் சுகாதார ஊழியர்கள் கூறினர். எனினும் மூன்று மணி நேரம் அந்த இளைஞரை கண்காணிப்பில் வைத்திருந்த பின், வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு சென்ற பிறகும், அவரது உடல் நிலையை மருத்துவ வல்லுனர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று அதிகாலை வரை அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க

விரைவாக பரவும் தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரிய வைரஸ் கண்டுபிடிப்பு!

செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு

English Summary: Vaccine 2 times in a few minutes for Youngster
Published on: 04 September 2021, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now