News

Saturday, 03 July 2021 09:30 AM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி (Vaccine) செலுத்த வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி

கோவிட் வைரஸ் பரவல் உலகையே உலுக்கி உள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பது தடுப்பூசி ஒன்று மட்டும்தான் என, உலக சுகாதார அமைப்பு (WHO) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் பங்கேற்று பேசினார்.

உலகளவில் தடுப்பூசி செலுத்துவதிலும், கிடைப்பதிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவே இல்லை. அங்குள்ள முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், முதியோர் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்குக் கூட தடுப்பூசி கிடைக்கவில்லை.

சில நாடுகள் இன்னும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும். அதனால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தால் தான் ஓரளவுக்கு கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாக அமையும்.

70% மக்களுக்கு தடுப்பூசி

இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பது தான் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரவும் முடியும் என அவர் தெரிவித்தார்.

Read More

டெல்டா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்கும்! WHO எச்சரிக்கை

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)