News

Saturday, 26 February 2022 07:26 PM , by: R. Balakrishnan

Vaccine from the plant

கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் வாயிலாக உலகிலேயே தாவர தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை கனடா பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி (Corona Vaccine)

இது குறித்து கனடா அரசின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: கனடாவை சேர்ந்த 'மெடிகாகோ' நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு 'டோஸ்' செலுத்தலாம்.

இதை 24 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்ததில் 71 சதவீதம் பலன் கிடைப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸால் உடலில் குறையும் புரோட்டீன் அளவை இந்த தடுப்பு மருந்து சமன் செய்கிறது. இந்த தடுப்பு மருந்தில் அமெரிக்காவின் 'கிளாக்ஸோ ஸ்மித் கிளைன்' நிறுவன தயாரிப்பான 'அட்ஜூவன்ட்' என்ற நோய் எதிர்ப்புக்கான ரசாயன மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் தாவரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி புதிய மைல்கல் என்றே சொல்லலாம். அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய கனடா நாட்டு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள்.

மேலும் படிக்க

தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு!

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதால் இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)