நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 May, 2021 10:49 PM IST
Credit : Dinamalar

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவியுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தடுப்பூசி (Vaccine) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 'நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என, பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தார். இந்த நிலையில், 'தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை' என, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், ''இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, முகங்கள் கவசம் அணிந்தால் நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்கலாம்.

மேலும் படிக்க

25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

English Summary: Vaccine shortage in India will last for a few months! Serum Officer Shocking Information!
Published on: 03 May 2021, 10:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now