மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2021 3:14 PM IST
Credit : Maalaimalar

வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தாயரிப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு மரவள்ளிக் கிழங்கில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரவள்ளி சாகுபடியில் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி நேரடியாக அளிக்கப்பட்டது.

செயல் விளக்கம்

வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், நீர் மற்றும் நிலவள திட்டத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். திட்ட உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா, மரவள்ளி சாகுபடியின் முக்கியத்துவம், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் கரணை வெட்டும் இயந்திரம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கினார்.

 

மதிப்புக்கூட்டுப் பொருட்கள்

மரவள்ளி கிழக்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிப்பது, அவற்றை சந்தைபடுத்துதல் குறித்தும் விளக்கினார். மரவள்ளியிலுள்ள, அனைத்து ரகங்களையும் சாகுபடி செய்து பயனடையும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற விவசாயிகளை, சேலம் மாவட்டத்திலுள்ள மரவள்ளி ஆராய்சி நிலையத்துக்கு நேரடியாக அழைத்துச்சென்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாணியாறு அணை பாசன விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மற்றும் செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து தேவையான தகவல்களை எப்போதும் தெரிந்துகொள்லாம். எனவும் வேளாண் அறிவியல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Value Added Material Demonstration training for farmers on Production From Cassava
Published on: 11 February 2021, 03:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now