மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 March, 2021 6:45 PM IST

வீணாகும் காய்கறிகளை, நேரடியாக கால்நடைகளுக்கு கொடுக்க கூடாது. பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்தோடு கலப்பு தீவனமாக மட்டுமே அளிக்க வேண்டும்,' என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வீணாகும் காய்கறிகள்

திருப்பூர் மாவட்டம், உடுமலை ராஜேந்திரா ரோடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படுகின்றன. இது தவிர, பல இடங்களில் வாரச்சந்தை கூடுகிறது. அப்போது, விலை இல்லாமல் தெருவில் வீசப்படும் தக்காளி, தர்பூசணி உள்ளிட்டவைகள், கால்நடைகளுக்கு நேரடி உணவாக வழங்கி வருகின்றனர். இவைகளை கால்நடைகள் உட்கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களிலும், வீடுகளில், வீணாகும் காய்கறிகளை நேரடியாக கால்நடை களுக்கு தீவனமாக வழங்குகின்றனர்.

தீவனமாகும் அழுகிய காய்கறிகள்

இதுதொடர்பாக கால்நடைத்துறை மருத்துவர்கள் கூறுகையில், சந்தையில், விலை கிடைக்காது தக்காளி, முள்ளங்கி, வெண்டைக்காய், தர்பூசணி உள்ளிட்ட காய்கறிகளை ஆங்காங்கே துாக்கி வீசி செல்கின்றனர். இவை அழுகி, அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகின்றன. சிலர், இதனை அள்ளிச் சென்று மாடுகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.

நுண்கிருமிகள் தாக்கும் அபயாம்

இவைகளை உட்கொள்வதால், ஆடு, மாடுகள், அதிகளவில் தக்காளியை உட்கொள்வதால், வயிற்றில் நுண் கிருமிகள் அதிகரிக்கும். கார அமிலத்தன்மை குறைந்து, மாடுகளின் வயிற்றில் புண் தோன்றி, அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.வயிற்றில் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அடைத்து ரத்தத்தின் தன்மையை மாற்றி விடும். ஒரு கட்டத்தில், மாடுகள் தீவனம் உண்ணாது. அசை போடாது. உடல் நிலை பாதிக்கும்.

கலப்பு தீவனமாக கொடுங்கள்

எனவே, வீணாகும் காய்கறிகளை, பசுந்தீவனம் மற்றும் அடர்த் தீவனத்தோடு கலப்புத் தீவனமாக, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அளிக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

பிறந்த கன்றுகளின் கவனிப்பும் -பராமரிப்பும்!

கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயனுள்ள இரு செயலிகள்!

English Summary: Veterinarians advises to use rotten vegetables only as a mixed fodder
Published on: 30 March 2021, 06:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now