சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 January, 2021 4:02 PM IST

வேளாண் துறையில், அறிவாளிகள், திறமைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுக்கவும், விவசாயத் தொழிலுக்கு படித்த இளைஞர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகள் தேவை என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

விவசாயிகள் கைகளில் இந்தியா

2030ம் ஆண்டை நோக்கி இந்திய விவசாயம்: விவசாயிகள் வருமானம், ஊட்டச்சத்து பாதுகாப்பு, நிலையான உணவு அமைப்பு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான வழிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பேச்சுவார்த்தை நிகழ்வுக்கு நிதி ஆயோக், மத்திய வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் வேளாண் இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார், அப்போது தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் முறைகளைக் கடைபிடிக்கும், விசயம் தெரிந்த நவீன சிந்தனையுடைய விவசாயிகள் கைகளின் தான் இந்திய வேளாண்மையின் எதிர்காலம் இருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.

விவசாயத்தில் இளைஞர்களின் பங்கு 

மேலும் இந்திய விவசாயத்தின் எதிர்காலம், தகவல் அறிந்த நவீன விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த விவசாய முறைகளில்தான் இருக்கிறது. படித்த இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிக செலவில் குறைந்த வருவாய் கிடைப்பதால்தான், இளைஞர்கள் இந்தத் தொழிலை அதிகம் விரும்புவதில்லை. இந்த சமூகப் பொருளாதார சூழலை மாற்ற வேண்டும்.

 

வலுவான விவசாய பரிசோதனை கூடங்களை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் விவசாயி மற்றும் தொழில் துறையினர் இடையே தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இத்துறைக்கு வர விரும்பும் விவசாயிகளுக்கு வழிகாட்ட தொழில் வளர்ப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

விவசாய உற்பத்தி செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதைக் குறைப்பதற்கான வழிகளை கொள்கைகள் உருவாக்குபவர்களும், இதர தரப்பினரும் காண வேண்டும். இயற்கை விவசாயத்தை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும். இது நுகர்வோருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும்.
இயற்கை விவசாயம், நாட்டை வளமாக்க மட்டும் அல்ல ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் மிகப் பெரிய இயக்கம் 2019-20ம் ஆண்டில், கொவிட்-19 தொற்று சூழ்நிலையிலும், உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பாராட்டுக்கள் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

மேலும் படிக்க...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது! 4.5 கோடியை அளித்தது தோட்டக்கலை துறை!


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் - 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!!

English Summary: Vice President calls for measures to prevent agro brain drain and attract youth to farming
Published on: 20 January 2021, 03:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now