மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 May, 2021 8:49 PM IST
Credit : Daily Thandhi

வியாபாரிகள் வராததால் விளை நிலங்களிலேயே தர்ப்பூசணி அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்ப்பூசணி

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் (Ground water) மூலமாகவும், பம்புசெட் என்ஜின் மூலமும், குளம், வாய்க்காலில் உள்ள நீர் மூலமும் நீர் பாய்ச்சி திருக்கடையூர் பகுதிகளில் பல ஏக்கர் மணல் திடல்களில் தர்ப்பூசணி சாகுபடி செய்து வந்தனர்.

இந்தநிலையில் திருக்கடையூர் விவசாயி ஆறுமுகம் கூறுகையில், மேற்கண்ட பகுதிகளில் நாங்கள் ஆண்டு தோறும் தர்ப்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்து வருகிறோம். இந்த பயிர் 60 நாட்களில் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலைக்கு வந்துவிட்டது. எனவே தற்போது தர்ப்பூசணி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பழங்களை உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் அதிக அளவில் இருக்கும் என்பதால் தர்ப்பூசணி பயிர் அதிக அளவில் பயிரிட்டிருந்தோம்.

வீணாகும் தர்ப்பூசணி பழங்கள்

இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் தர்ப்பூசணி வாங்க வரும் வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் தர்ப்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் விளை நிலத்திலேயே தர்ப்பூசணி பழங்கள் அழுகி வீணாகி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


மேலும் படிக்க

கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பனை ஓலை பெட்டி! வியாபாரிகள் ஆர்வம்!

English Summary: Wasted watermelon fruits in the fields! Request to provide compensation!
Published on: 06 May 2021, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now