News

Monday, 02 December 2019 03:47 PM , by: Anitha Jegadeesan

சிறு மற்றும் குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி நுண்ணிர் பாசனத் திட்டத்தின் கீழ் பல விவசாயிகள் பதிவு செய்து 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திர வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் கூறுகையில், மத்திய அரசின் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர்ச் சாகுபடி" என்ற திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 400 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 600 ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் பதிவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.

தற்போது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு, அதே மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் நீரை சேமித்து வைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர்த்தொட்டி கட்டுவதற்கு ரூ.40,000 மானியமும், நீர் கடத்தும் குழாய்களை அமைப்பதற்கு ரூ.10,000 மானியமும், டீசல் என்ஜின் அல்லது மின் மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000 மானியமும் வழங்கப்பட உள்ளது.

மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணை பெறப்பட்ட பின், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இத்திட்டத்திம் குறித்த விரிவான தகவல் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)