மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2021 6:42 PM IST
Credit : Userspecial

கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. நிழலில் நின்று 10 ரூபாய்க்கு நாட்டுத் தண்ணீர் பழம் வாங்கித் தின்னும்போது, எத்தனை செல்சியஸ் டிகிரி வெயில் அடித்தாலும் அதை உணர முடியாது. உண்மையில் இந்த பழங்களை விவசாயிகள் கண்ணீரைச் சிந்தி வளர்க்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

விவசாயிகள் கவலை

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயப் பணி பிரதானத் தொழிலாக உள்ளது. இந்தநிலையில் கோடைக் காலத்தையொட்டி வேடபட்டி, பூலுவம்பட்டி, இருட்டு பள்ளம், சேம்மேடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்துள்ளனர். ஆனால் கொரோனா (Corona) நோய்த்தொற்று பரவுதல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில், தர்பூசணி, வெள்ளிரிக்காய் மற்றும் முலாம் பழங்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாக, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை (Lockdown) அறிவித்தது தமிழக அரசு. இதனால், தர்பூசணிக்கு எதிர்ப்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதோடு, விற்பனையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டுமே, இவர்களின் நிலை மாறும்.

மேலும் படிக்க

கோடையில் கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க அருமையான நாட்டு மருந்து

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

English Summary: Watermelon sales sluggish due to corona restrictions in summer! Farmers worried!
Published on: 29 April 2021, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now