நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 December, 2021 2:46 AM IST
PM Modi - Organic Farming

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று (டிசம்பர் 16) கூறினார். மேலும், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இயற்கை விவசாயம் (Organic Farming)

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “இன்று, சில விவசாயிகள் இரசாயனங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்று நம்புகிறார்கள், ஆனால் இது முற்றிலும் தவறானது. இயற்கை விவசாயத்தின் பழங்கால மரபுகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அங்கு நாம் இயற்கையுடன் இணைந்து இருந்தோம்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi).

மேலும், “இந்தியாவில் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் அதிகப் பலன்களைத் தரும். ரசாயன உரங்களுக்கு செலவிடும் பணத்தைக் குறைத்து இயற்கை விவசாயத்துக்குத் திரும்பினால் இந்த விவசாயிகளின் நிலைமை வெகுவாக மேம்படும்” என்றார்.

பயிர் கழிவுகள் (Crop Waste)

விவசாயிகள் ‘பயிர் கழிவுகளை’ செயல்முறையை கை விட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். “விவசாய நுட்பங்களில் உள்ள தவறுகளையும் நாம் அகற்ற வேண்டும். பயிர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தின் வளம் குறைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்” என்றார்

"21ஆம் நூற்றாண்டில், உலகை இந்தியா வழிநடத்தப் போகிறது, இந்திய விவசாயிகள் தான் வழிநடத்தப் போகிறார்கள். நமது சுதந்திர தினத்தின் 100வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது , இயற்கை விவசாயத்தின் மூலம் இயற்கையுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பிற்கான சிறந்த தீர்வை உலகிற்கு இந்தியா வழங்கும்" என்று மோடி கூறினார்.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் (Zero Budjet farming)

இயற்கை மற்றும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் (Zero Budjet farming) குறித்த மூன்று நாள் உச்சி மாநாடு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி நிறைவடைகிறது.

மேலும் படிக்க

வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!

வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!

English Summary: We need to change natural agriculture into a people's movement: PM Modi!
Published on: 16 December 2021, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now