மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 December, 2021 4:17 PM IST
Weather conditions for the next 5 days!

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த பருவ மழை, நமக்கு 2016ஆம் மழையை நினைவூட்டியது. இந்த மாதமும் ஒரு சில இடங்களில் லேசான மழை இருந்த போதிலும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை அறிவிப்பை, சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலும் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே காணப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதாவது டிசம்பர் 20 வெளியிட்ட அறிவிப்பில், “இன்று முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் அதாவது டிசம்பர் 20 மற்றும் 21அன்று  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழையின் அச்சம் இருந்து வந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி கடலோர மாவட்டங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்பது குறிப்பிடதக்கது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருவதையும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று டிசம்பர் 20ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க:

ஒசூரில் குறுவை பயிர்கள் சேதம்! விவசாயிகள் அவதி!

குற்றாலத்தில் குளிக்க இன்று முதல் அனுமதி!

English Summary: Weather conditions for the next 5 days!
Published on: 20 December 2021, 04:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now