மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2019 11:39 AM IST

கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது.  தமிழகம் மற்றும் புதுவையில் வெயில் சதத்தை  தொட்டது. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இந்த மாதம் தொடங்கிய அக்னி வெயிலானது  இன்னும் நீடிக்கிறது. தமிழகத்தின் இன்றும், நாளையும் இயல்பை விட  2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவும்,  கடலோர மாவட்டங்களில்  4  டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கிட பட்டுள்ளது. 

மழைக்கு வாய்ப்பு:

அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை சற்று அதிகமாக இருந்த போதிலும் பெய்யவிருக்கும் கோடை மழை சற்றே ஆறுதல்  எனலாம்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். வட மாவட்டங்களின் உட்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், காற்றின் வேகமானது 40-50 கி.மீ. வரை இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மேகமூட்டம் காணப்படும். குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியல் ஆகவும் ,  அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் காணப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Anitha Jegadeesan

English Summary: Weather Forecast Of Tamil Nadu And Pondicherry: Both States Likely To Get Summer Rain For The Two To Three Days
Published on: 27 May 2019, 11:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now