மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2019 12:58 PM IST

தமிழகம் மற்றும்  புதுவையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீச கூடும். தென்மேற்கு பருவமழை  தாமதமாவதால் வெயில் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இன்னும் இரு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், கடும் அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கமானது தென் மாவட்டங்களை விட, வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலுார், திருத்தணி உள்பட 11 மாவட்டங்களில் மிக அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. பெரும்பாலான வட மாவட்டங்களில் வெயிலானது சதத்தை நெருங்கி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பநிலையானது அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி ஆக இருக்கும் என கூறியுள்ளது. நாளை 41 டிகிரியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

கடற்கரையோர   மாவட்டங்களில் இந்த அனல் காற்றின் தாக்கம் அதிகமாக  இருக்கும் எனவும்,  குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை  தவிர்க்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary: Weather Forecast Today In Chennai And Pondy: Temperature Shows 40 Degree And Above: Reported By Chennai Meteorological Department
Published on: 25 May 2019, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now