மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 October, 2019 11:43 AM IST

தமிழகத்திற்கு ஆதாயம் தரும் மழைகளில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகும். இன்றுடன் தென்மேற்கு பருவ மழை படிப்படியாக குறைந்து, இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழையானது  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும்,  வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பொழியும். ஆனால் இம்முறை மழை பொழிவானது நான்கு மாதங்களாக நீடித்து சற்று தாமதமாக விடை பெற்ற உள்ளது. இந்த மழை பொழிவினால் இந்திய முழுவதும் ஓரளவிற்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தென் மாநிலங்களில் இருந்து விலகி மற்ற பகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவிலும் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கிருந்தும் விலகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக விடை பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ மழையில் தான் அதிக பலன் கிடைக்கும்.  ஆனால் இம்முறை பெய்த தென்மேற்கு பருவ மழையினால் இயல்பை விட 110% அதிகம் பெய்துள்ளது. காற்றின் திசை பொறுத்து வடகிழக்கு பருவ மழை அதிகரிக்க கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Weather Updates: Southwest Monsoon Finally Begins to Withdraw, Reported by IMD
Published on: 10 October 2019, 11:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now