நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 August, 2022 5:55 AM IST
Parcel Service in Government bus

அரசு விரைவு பஸ்களில், வருவாயை பெருக்கும் வகையில், கூரியர் மற்றும் பார்சல் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கி.மீ., அடிப்படையில், தினசரி மற்றும் மாதக் கட்டணத்தில், இந்த பார்சல் சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

பார்சல் சேவை (Parcel Service)

பார்சல் சேவைத் திட்டம் தொடங்கிய முதல் நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்துார், துாத்துக்குடி, விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை; கோவையில் இருந்து குருவாயூர்; திருச்சியில் இருந்து திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் நேற்று பார்சல் அனுப்பப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே, 2,000 கிலோவுக்கு மேல் பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பார்சல் சேவையில், 80 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு, கி.மீ., அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவு பஸ்களில் அனுப்பப்படும் பார்சல்கள், தனியார் லாரிகளில் அனுப்புவதை விட, விரைவாக சென்று சேரும் என்பதால், தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் பார்சல்களை அனுப்ப, பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தமிழக போக்குவரத்து துறையின் இந்த சேவையால் பலரும் பயன்பெறுவார்கள். மேலும், இத்திட்டத்தௌ தொடங்கிய முதல் நாளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், வரும் நாட்களில் பார்சல் சேவை தனி முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் பார்சல் சேவை: நாளை முதல் தொடக்கம்!

அரசு பேருந்தில் குடை பிடித்த பயணி: இணையத்தில் வைரல்!

English Summary: Weeding Parcel Service in Government Buses: Well received by the people!
Published on: 04 August 2022, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now