News

Saturday, 14 May 2022 06:00 PM , by: T. Vigneshwaran

Taj mahal Secret tips

இந்தியாவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அப்படி கருதவில்லை. தாஜ்மஹாலின் "உண்மையான வரலாற்றை" கண்டறிய அதன் "நிரந்தரமாக பூட்டப்பட்ட" 20 அறைகளை திறக்ககோரி, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை அந்த நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

குறிப்பாக, இந்த பூட்டப்பட்ட அறைகளில் இந்து மதக்கடவுளான சிவனுக்கு ஆலயம் இருந்ததாக, "வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள்" கூறுவதை தான் சோதிக்க விரும்புவதாக, இந்த வழக்கை தாக்கல் செய்த ராஜ்னீஷ் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

14ஆவது குழந்தையை பெற்றெடுக்கும்போது இறந்த தன் மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய பேரரசர் ஹாஜஹான் எழுப்பிய கல்லறை தான் தாஜ்மஹால். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. அதிசயிக்கும் வகையிலான இந்த நினைவுச்சின்னம் செங்கற்கள் மற்றும் சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டது. சிக்கலான வலைப்பின்னல் அலங்காரத்திற்கு பெயர்பெற்ற தாஜ்மஹால், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக உள்ளது.

பூட்டப்பட்ட அறைகளில் என்ன இருக்கிறது?

ராஜ்னீஷ் சிங் குறிப்பிடும் பூட்டப்பட்ட அறைகள் பெரும்பாலானவை, தாஜ்மஹாலில் நிலத்தின் அடியில் உள்ளன. தாஜ்மஹாலின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அந்த அறைகளில் பெரும்பாலும் எதுவும் நடக்கவில்லை.

முகலாய கட்டடக்கலை குறித்த ஆய்வாளரும் 'மெஜிஸ்திரியல் ஸ்டடி ஆஃப் தாஜ்' ஆய்வின் ஆசிரியருமான எப்பா கோச், தன் ஆய்வின் போது தாஜ்மஹாலின் அறைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இந்த அறைகள் தக்கானா (tahkhana) அல்லது வெப்பம் நிறைந்த கோடை மாதங்களில் தங்குவதற்கு பயன்படுத்தப்படும் அறைகளாகும். தாஜ்மஹாலின் மேல்தளத்தில் உள்ள கலை காட்சிக்கூடத்தில் இத்தகைய "அறைகளின் தொகுதிகள்" உள்ளன. நதிக்கரை அருகில் 15 அறைகள் வரிசையாக அமைந்துள்ளதையும், குறுகிய நடைபாதை இருந்ததையும் கோச் கண்டறிந்தார்.

ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு பெரிய அறைகளும், ஆறு சதுர வடிவிலான அறைகளும் மூன்று எண்கோண அறைகளும் அமைந்துள்ளன. இதில் பெரிய அறைகள், அழகான வளைவின் வழியே நதியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. "வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்ட அறைகளில் வண்ணப்பூச்சு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததாகவும்" "மையத்தில், ஒரு பதக்கத்துடன் கூடிய நட்சத்திரங்களின் பொதுமையம் கொண்ட வட்டங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட வலைப்பின்னல் வடிவங்கள்" இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த கல்லறையை பார்வையிடும்போது பேரரசர், பெண்கள், பரிவாரங்கள் ஆகியோர் குளிர்ந்த இடத்தில் பொழுதை கழிப்பதற்காக அமைக்கப்பட்ட அழகான, காற்றோட்டமான பகுதியாக அவை இருந்திருக்க வேண்டும். இப்போது அங்கு இயற்கையான வெளிச்சம் இல்லை," என வியன்னா பல்கலைக்கழகத்தில் ஏசியன் ஆர்ட் பேராசிரியரான கோச் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தங்கம் விலை: ரூ.38,000க்கும் கீழ் குறைந்தது தங்கத்தின் விலை

அரசு பள்ளிக்கு 3.50 லட்சம் மதிப்பில் கல்வி சீர்வரிசை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)