மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 May, 2021 4:02 PM IST
stau home stay safe..

தற்போது கொரோனா வைரஸ் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பெருமளவு குழந்தைகளை தாக்கும் கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கும் போது உண்டாகும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளில் குழந்தைகளும் உண்டு என்பது தான் வேதனையானது, அதிர்ச்சியானது.

இந்த வைரஸ் பெரியவர்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கு சமமான ஆபத்தை உண்டாக்கி விடுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பிறழ்வு திரிபு குழந்தைகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது பெற்றோர்களிடையே அதிக கவலையை ஏற்படுத்துகிறது.  அதோடு குழந்தைகளுக்கு எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு உண்டாகும் வைரஸ் தொற்று குறித்து பார்க்கலாம்.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கொரோனா

இந்த வைரஸ் 8 மாதங்கள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெரியவர்களைப் போல் இல்லாமல் குழந்தைகளின் வெளிப்பாடு குறைவாகவே உள்ளது. மேலும் அதன் தீவிரம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே கொரோனாவின் பொதுவான அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஹார்வர்ட் ஹெல்த் (hot water Health ) அளித்த அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு பெரியவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு குறைவான அறிகுறிகள் இருக்கலாம். காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகளாகும்.

குழந்தைகளுக்கு தொடர்ந்து 103-104 டிகிரி செல்சியஸ் வரை காய்ச்சல் வரலாம். காய்ச்சல் 4-5 நாட்கள் நீடித்தால் அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாகக் கையாள வேண்டும். பெற்றோர்கள் ஆக்ஸி பல்ஸ்(Oxy Pulse)  மீட்டரைக் கண்காணிப்பது மற்றும் அது குறைவாக இருந்தால் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

 

குழந்தைகளிடம் மல்டி சிஸ்டம் அழற்சி நோய்க்குறை (எம்ஐஎஸ்-சி (Multisystem Inflammatory Syndrome)

கொரோனாவின் மற்ற பொதுவான அறிகுறிகளை தவிர கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளில் மல்டி சிஸ்டம் எண்ணிக்கை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளன.

MIS-C - நிலை கொண்ட குழந்தைகள் இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, தோல் அல்லது கண்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு உறுப்புகளில் கடுமையான அழற்சியை கொண்டுள்ளனர்.

அசாதாரண அறிகுறிகள்

வழக்கமான அறிகுறிகளை தவிர, குழந்தைகள் சில நேரங்களில் பெரியவர்களுக்கு வேறுபட்ட அறிகுறிகளை காண்பிக்கலாம். இந்த அறிகுறிகள் மிக குறைவாக தோன்றலாம்.

கடுமையான மற்றும் குளிர்ந்த நிலையில் குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் மேலும் தீவிர நிகழ்வுகள் நிமோனியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். மூக்கு, சிவப்பு விரிசல் உதடுகள், முகம் மற்றும் உதடுகளில் நீல நிறம், எரிச்சல், தூக்கமின்மை, பசியின்மை போன்றவை குழந்தைகளுக்கு உண்டாகும் கொரோனாவின் வேறு சில அறிகுறிகள் ஆகும்.

குழந்தைகளுக்கு கொரோனா வந்தால் அது தொற்றை உண்டாக்குமா?

பெரும்பாலான குழந்தைகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் லேசான அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு வைரஸை பரப்ப முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நோயை மற்றவர்களுக்கும் பரப்பும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.

மேலும் அவர்களின் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இதை உறுதியாக சொல்ல முடியாது. எந்த ஒரு முடிவையும் அறிந்து கொள்வதற்கு முன்னர் இது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை தொற்றில் இருந்து எப்படி பாதுகாப்பது

குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுப்பது முக்கியம். குழந்தைகளிலும் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க சரியான விதிகளைப் பின்பற்றுவது முக்கியம். குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே வழி இதுதான்.

சமூக தூரத்தை கடைபிடிக்க குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகமூடி அணிய வேண்டும். அவ்வப்போது கைகளைக் கழுவச் சொல்வதும் முக்கியம். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாததால், பருவகால தடுப்பூசிகள் ஏதேனும் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டாம். ஏனெனில் பருவ கால காய்ச்சல் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளை பெறலாம்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உணவில் இருப்பது அவசியம். அவர்களை நீரேற்றமாக வைத்திருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உறுதி செய்யுங்கள்.

மேலும் படிக்க....

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

English Summary: What are the symptoms of corona in children? Parents need to know!
Published on: 10 May 2021, 04:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now