News

Monday, 09 May 2022 06:54 PM , by: T. Vigneshwaran

குரங்கு அம்மை என்பது ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும். அதாவது பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வேரியோலா வைரஸையும், பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் வேசினியா வைரஸையும் உள்ளடக்கில் வைரஸ் வகையாகும். குரங்கு நோய் பெரியம்மை நோயின் தான் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒப்பிடுகையில் தீவிரம் குறைவாக இருக்கும்.

1980களில் தடுப்பூசி மூலம் பெரியம்மை நோய் பரவலை தடுத்தாலும், குரங்கு அம்மை தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வருகிறது.

விலங்கிடமிருந்து பரவும் நோய்

குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். இதுவரை அணில், காம்பியன் வேட்டையாடிய எலிகள், டார்மிஸ் மற்றும் சில குரங்கு வகைகளில் குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த நோய் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவது வரையறுக்கப்பட்டதாகும். ஏனெனில், அதன் பரிமாற்றம் ஆறு தலைமுறை இடைவெளி கொண்ட நீண்ட சங்கிலி ஆகும். கடைசியாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர், ஓரிஜினலாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆறு லிங்க் தள்ளியிருந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) மருத்துவ மற்றும் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகளின் இயக்குனர் டாக்டர் கொலின் பிரவுன் கூறுகையில், “குரங்கு அம்மை மக்களிடையே எளிதில் பரவாது என்பதையும், பொது மக்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்பதையும் வலியுறுத்துவது முக்கியம் என்றார்.

அப்படி பரவுகிறது என்றால், உடல் திரவங்கள் வாயிலாகவும், தோலில் ஏற்படும் புண்கள் வாயிலாகவும் அல்லது வாய், தொண்டை, சுவாசத் துளிகளாலும், அசுத்தமான பொருள்கள் போன்ற உள் சளிப் பரப்புகளின் மூலம் பரவலாம் என்று WHO கூறுகிறது.
மேலும் படிக்க 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)