News

Tuesday, 22 November 2022 06:32 PM , by: T. Vigneshwaran

Scholarship

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதிகள் : ஆண்டு வருமானம் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022ஆம் தேதி முதல் செயல்படுகிறது.

புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023க்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய நடைமுறை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)