மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2021 3:07 PM IST
Tamil Nadu School

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கீடப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஓரிரு நாள்களில் +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அல்லது நாளை மறுதினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முனதாக, ஜூலை 31 ஆம் தேதிக்குள் +2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது விரைவில் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

- 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% மதிப்பீடு செய்யப்படும்.

இந்த முறையில் கணக்கீடு செய்யப்படும் மதிப்பெண்கள், குறைவாக உள்ளது என்று மாணவர்கள் கருதினால், அவர்களுக்கு விருப்பம் இருந்தால், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்படும் என்றும்  தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

முறையாக 13 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்தன்மு

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - ஷிப்ட் முறையில் நடத்துவது குறித்து அரசு பரிசீலனை!

 

English Summary: When will the Plus 2 mark be released in Tamil Nadu? Full details here !!
Published on: 14 July 2021, 03:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now