News

Saturday, 24 September 2022 07:00 PM , by: T. Vigneshwaran

Protecting bananas from cyclones

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சூறாவளி காற்றில் இருந்து பணப்பயிரான வாழை மரங்களை காப்பாற்ற சவுக்கு மரங்கள் நடவு செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி செய்யும் போது அதிகப்படியான வாழை மரங்களை சேதங்கள் இல்லாமல் காக்க முடியும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவிநாசி ஒன்றியம் அசநல்லிபாளையத்தில், வேளாண்மை துறை சார்பில் வாழை தோட்டங்களை சுற்றிலும் சவுக்கு நாற்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர் அறுவடையின்போது சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழை தோட்டங்களை சுற்றிலும் சவுக்கு நாற்று நடவு செய்யும்போது மரங்கள் முறிந்து விழுவதில் இருந்து பாதுகாக்க முடியும். விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் கணிசமான அளவில் தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர் கலையரசன், வேளாண்மை உதவி அலுவலர் வினோத்குமார், வேளாண்மை துறை அலுவலர் சுஜி, தோட்டக்கலை துறை அலுவலர் அனுஷியா, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் மஞ்சு, ஊராட்சி துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க

மதுரை தானிய குடில் இயற்கை உணவகம், என்னென்ன இருக்கு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)