News

Saturday, 13 August 2022 12:41 PM , by: R. Balakrishnan

Pop corn price in Theatre

பி.வி.ஆர்., மல்டிபிளக்ஸ் திரையரங்க தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி இந்தியாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடைவதற்கான அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார். இது பற்றி அஜய் பிஜ்லி கூறியதாவது: பி.வி.ஆர்., திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் விலைகள் அதிகமாக இருப்பதற்கு எதிராக பேசுபவர்களை பற்றி நான் குறைகூற விரும்பவில்லை.

திரையரங்குகள் (Theatres)

மல்டிபிளெக்ஸ் திரைகளுக்கான இயக்க மற்றும் மூலதனச் செலவுகள் தனி அரங்குகளுக்குடன் ஒப்பிடும் போது பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. முன்னர் ஒற்றைத் திரையில் ஏசி இல்லாத அரங்கு, ஒரு புரொஜெக்சன் அறை, ஒரு சவுண்ட் சிஸ்டம் இருக்கும். மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு அதைவிட 4 முதல் 6 மடங்கு செலவிட வேண்டியிருக்கிறது.

குறைந்த இடத்தில் அதிக திரைகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பிற்கு செலவிட வேண்டும், மால்களில் இடங்களை லீசுக்கு எடுக்கும் செலவு போன்றவை உள்ளன. தரமான அனுபவத்தை வழங்க செலவிட வேண்டி இருக்கிறது. மக்கள் அந்த அனுபவத்தை பெறும் போது புகார் செய்வதில்லை. மக்கள் தங்களுக்கு கிடைக்கும் தரமான அனுபவத்தால் பெருமளவில் மகிழ்ச்சியடைகின்றனர்.

இல்லையெனில் உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை இவ்வளவு இருந்திருக்காது. தற்போது எங்களின் உணவு மற்றும் குளிர்பானங்கள் தொழில் ரூ.1,500 கோடி மதிப்பு கொண்டது. ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைப்பை அறிவித்துள்ளோம். சில மாதங்களில் அதற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு: பொதுமக்கள் நிம்மதி!

தொடர் விடுமுறை: பயணிகளுக்காக 610 சிறப்பு பேருந்துகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)