சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 June, 2022 6:44 PM IST
Luxury Cruise
Luxury Cruise

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், புதுச்சேரிக்குள் சொகுசு கப்பல் வருவதற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான காரணத்தை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சொகுசு கப்பல் புதுவைக்கு வர அனுமதி மறுப்பு

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்க்கடலுக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சமீபத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார். இந்த சுற்றுலா திட்டத்தை ஜுன் மாதம் 4 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக கார்டெலியா க்ரூஸ் ( Cordelia Cruise ) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு ஏன்?

இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கப்பல் புதுச்சேரிக்குள் வருவதற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் இது குறித்து விளக்கம் அளித்த புதுச்சேரி துனை நிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் சுற்றுலாவை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சர்வதேச கடல் வழி, மாநிலத்திற்கான கடல் வழிஎன உள்ளது. அந்த கார்டெலியா க்ரூஸ் என்ற சொகுசு கப்பலில் உள்ள ஒரு சில நிகழ்வுகள் ஒப்புதல் இல்லாத காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் மட்டும் தனிப்பட்ட முறையில் அனுமதி மறுக்கவில்லை, அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அனுமதி மறுத்ததாக தெரிவி்தார். அதே வேளையில் புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க

கைகளை கட்டி அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

English Summary: Why is luxury ship not allowed in Pondicherry? Description!
Published on: 13 June 2022, 06:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now