நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 March, 2022 4:07 PM IST
Kodaikanal Forest Fire

கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

கொடைக்கானல் வனசரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் கட்டு கடங்காமல் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டு தீ, காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் தீவிரம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மச்சூர் பகுதியில், தோகை வரை என்னும் இடத்தில் தீ பற்றிக்கொண்டு எரிந்த நிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் மயிலாடும் பாறை என்னும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கட்டு கடங்காமல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

இது அரிய மூலிகைத் தாவரங்கள் மற்றும் மதிப்புமிக்க மரங்கள் எரிந்து சாம்பலாவதற்கு வழிவகுத்தது, அத்துடன் அரிய வகை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

தற்போது எரிந்து வரும் காட்டு தீ மலை பகுதிகளின் மேல் பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காட்டு தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு தீ தடுப்பு எல்லைகள் அமைக்கப்படும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ பரவி வருவதால் கொடைக்கானல் மச்சூர் மலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

கொடைக்கானலில் அத்திப்பழ சீசன்: இந்த ஆண்டு அதிரடி விளைச்சல்!

கொடைக்கானலில் கருப்பு கேரட்! விவசாயிகளின் புது முயற்சி!

English Summary: Wild fires Spreading in Kodaikanal Soldiers Struggle to Fire
Published on: 11 March 2022, 03:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now