சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 December, 2020 11:08 AM IST
Credit : Dinakaran

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் (சம்பார் வெங்காயம்) சாகுபடி (Cultivation) செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியடையும் காலங்களில் கூட சின்ன வெங்காயம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவதில்லை. எனவே, ஓரளவு லாபம் (Profit) கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

நிவர் புயல் தாக்குதல்:

கடந்த 26ம் தேதி நிவர் புயல் (Nivar Cyclone) காரணமாக திருவண்ணாமலை பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால், புனல் காடு கிராமத்தில் சாகுபடி செய்திருந்த சின்ன வெங்காயம் விளை நிலத்திலேயே அழுகியது. தொடர்ந்து மழை பெய்ததாலும், தண்ணீர் வெளியேறாமல் நிலத்தில் தேங்கியதாலும் சின்ன வெங்காயம் அழுகியதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை!

நெல், கரும்பு, வாழை போன்ற பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதை போல, சின்ன வெங்காயம் சேதத்துக்கும் இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்ன வெங்காயத்திற்கும் இழப்பீடு அளித்தால், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

நிவர் புயலால் எண்ணற்ற விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காலம் தாழ்த்தாது இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முதன்மையான கோரிக்கை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நிவர் புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

 

English Summary: Will compensation be given for small onions rotted by Nivar storm? Farmers demand!
Published on: 01 December 2020, 11:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now